மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
உடன்குடி : குலசேகரன்பட்டணம் வீரமனோகரி அம்மன் கோயிலில் கதவை உடைத்து அம்மன் சிலை உட்பட்ட பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது; குலசேகரன்பட்டணம் வடக்கூர் வீரமனோகரி அம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் பூஜை வைப்பதற்காக பகலில் பூசாரி கோயிலை திறந்துள்ளார். உள்கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயிலின் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம ஆசாமிகள் கோயிலில் இருந்த செம்பினால் செய்யப்பட்ட ஒன்றரை அடி உயரமுள்ள உற்சவர் சிலை, ஒரு சாண் உயரமுள்ள அம்மன் சிலை, வெள்ளி கிரீடம், வெள்ளி மார்பு கவசம், ஒட்டியானம், மார்பு அங்கி, சூலக்கை ஆகிய பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து கோயில் அக்தார் வீரபாகு வல்லவராயர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கோயிலுக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025