மேலும் செய்திகள்
விபத்தில் 2 வாலிபர்கள் இறப்பு
04-Oct-2025
குலசையில் தசரா விழா கோலாகலம்
03-Oct-2025
சென்னை போலீஸ்காரர் கோவில்பட்டியில் தற்கொலை
03-Oct-2025
மாஜி போலீஸ்காரருக்கு சிறை
28-Sep-2025
கப்பலில் இருந்து விழுந்தவர் பலி
27-Sep-2025
தூத்துக்குடி:2010-11ம் நிதியாண்டில் இதுவரை 1.5 லட்சம் டி.இ.யூ., சரக்கு பெட்டகங்களை கையாண்டு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.வஉசி., துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் சுப்பையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது; இந்திய பெரிய துறைமுகங்களில் 10வது துறைமுகமாக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வஉசி., துறைமுகம் சரக்கு கையாளுவதில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. வஉசி., துறைமுகம் 2010-11 நிதியாண்டில் 25.73 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு இந்திய பெரிய துறைமுகங்களில் வளர்ச்சியின் அடிப்படையில் முதலாவது துறைமுகமாக இருந்து வருகிறது. கடந்த 2010-11 நிதியாண்டில் 4,67,752 டி.இ.யூ., சரக்கு பெட்டகங்களை துறைமுகம் கையாண்டது. இந்த சாதனை அதற்கு முந்தைய நிதியாண்டான 2009-10ல் கையாளப்பட்ட 4,39,948 டி.இ.யூ., சரக்கு பெட்டகங்களை விட 6.32 சதவீதம் கூடுதல் ஆகும். மேலும் இந்த சாதனை மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 4,45,000 டி.இ.யூ.,களை விட 5.11 சதவீதம் கூடுதல் ஆகும். சரக்கு பெட்டகங்களின் சராசரி உற்பத்தி குறியீடு 4.49 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டான 2011-12ல் இன்று வரை 1,51,116 டி.இ.யூ., சரக்கு பெட்டகங்களை கையாண்டு துறைமுகம் சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடந்த நிதியாண்டின் இதேகால அளவில் கையாளப்பட்ட சரக்கு பெட்டகங்களை விட 1.75 சதவீதம் கூடுதல் ஆகும். வ.உ.சி., துறைமுக பொறுப்பு கழகம் துறைமுகத்தில் 8வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றி அமைக்கும் திட்ட பணிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் துறைமுகத்தின் ஆய்வில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
04-Oct-2025
03-Oct-2025
03-Oct-2025
28-Sep-2025
27-Sep-2025