உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ரயிலில் சார்ஜ் போட்ட போது வெடித்தது மொபைல் போன்

ரயிலில் சார்ஜ் போட்ட போது வெடித்தது மொபைல் போன்

வாணியம்பாடி:சென்னையிலிருந்து நேற்று காலை, மைசூர் நோக்கி, வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷன் அருகே சென்றபோது. சி - 11 பெட்டியில், குஷ்நாத்கர் என்ற பயணி தன் மொபைல்போனை சார்ஜ் போட்டார்.அப்போது, மொபைல்போன் வெடித்து அதிக புகை வந்தது. அந்த பெட்டியில் இருந்த பயணியர் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து, அந்த ரயில், வாணியம்பாடி ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. பெட்டியின் மின் ஒயர்கள் சரிபார்க்கப்பட்டு, ஆய்வு செய்த பின், அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி