உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் /  மாணவர்களை தாக்கிய மதரசா ஆசிரியர் நீக்கம்

 மாணவர்களை தாக்கிய மதரசா ஆசிரியர் நீக்கம்

திருப்பத்துார்: மதரசா பள்ளியில் மாணவ - மாணவியரை தாக்கிய ஆசிரியரை நீக்க பெற்றோர் வலியுறுத்தியதால், மசூதி நிர்வாகிகள் அவரை பணி நீக்கம் செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி பஷிராபாத் மசூதி வளாக கட்டடத்தின் முதல் தளத்திலுள்ள மதரசா பள்ளியில், 60, மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இங்கு நான்கு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதில், வாணியம்பாடி ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த சுஹேப் என்ற ஆசிரியர், மாணவ - மாணவியரை கடுமையாக தாக்கும் வீடியோ பரவியது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், பஷிராபாத் மசூதி நிர்வாகிகளிடம் வாக்குவாதம் செய்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து, அவரை பணியிலிருந்து நீக்கியதாக, மசூதி நிர்வாகிகள் கூறியதையடுத்து, பெற்றோர் சமாதானமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை