மேலும் செய்திகள்
கடத்தல் கார் மோதி முதியவர் பலி
13-Sep-2025
திருப்பத்துார்:பெங்களூருவுக்கு கடத்த இருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 820 கிலோ செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திருப்பத்துார் அடுத்த கொடும்மாம்பள்ளியை சேர்ந்தவர் சேகர், 35. இவர், ஆந்திராவிலிருந்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 820 கிலோ செம்மரக்கட்டைகளை கடத்தி வந்து, காக்கனா பாளையத்தில் அவருக்கு சொந்தமான, விவசாய நிலத்திலுள்ள பம்பு செட்டில் பதுக்கி வைத்திருந்தார். நேற்று, இங்கிருந்து செம்மரக்கட்டைகளை பெங்களூருவுக்கு கடத்த உள்ளதாக, திருப்பத்துார் வனச்சரகர் சோழராஜனுக்கு கிடைத்த தகவலின் படி, வனத்துறையை சேர்ந்த ஊழியர்கள், சம்பவ இடம் சென்று பதுக்கி வைத்திருந்த, 820 கிலோ செம்மரக்கட்டைகள், 3 கார்கள், 2 பைக்குகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட சேகரையும் கைது செய்து, சிவா என்பவரை தேடி வருகின்றனர்.
13-Sep-2025