பெருமாள் கோவிலில் பாலாலயம்
அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் மற்றும் பாலாலய நிகழ்ச்சி நடந்தது. விஷ்வக் ஷன ஆராதனை, பஞ்சராத்ர ஆகமம், புண்யாகவாசனம் ஆகியவை முதல் கால யாக பூஜையிலும், பாலஸ்தாபனம்,திரவியாகுதி மற்றும் பிரசாதம் வழங்குதல் இரண்டாம் கால வேள்வி பூஜையிலும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.