உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தென்னந்தடுக்கு உற்பத்தி தீவிரம்; கோடைக்காக தயாராகிறது

தென்னந்தடுக்கு உற்பத்தி தீவிரம்; கோடைக்காக தயாராகிறது

உடுமலை: கோடை வெயிலை சமாளிக்க உதவும், தென்னந்தடுக்கு உற்பத்தியை நீண்ட இடைவெளிக்குப்பிறகு தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.உடுமலை ஜல்லிபட்டி, தினைக்குளம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரமாக தென்னந்தடுக்கு உற்பத்தி செய்யும் தொழில் உள்ளது.அங்குள்ள தொழிலாளர்கள், சுற்றுப்பகுதியிலுள்ள தென்னந்தோப்புகளில் மட்டைகளை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து தடுக்கு பின்னுகின்றனர்.வெயில் காலத்தில், பந்தல் அமைத்தல், குடிசை மேற்கூரை என பல்வேறு இடங்களில், இவ்வகை தென்னந்தடுக்குகள் பயன்பட்டு வருகின்றன.இங்கு உற்பத்தியாகும் தடுக்குகள், பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வந்தது. நாளொன்றுக்கு, தனி நபர் ஒருவர், 100 தடுக்கு வீதம், 2,000 ஆயிரம் தடுக்குகள் வரை பின்னுகின்றனர். பின்னர் அவற்றை, 25 தடுக்குகள் கொண்ட கட்டுகளாக கட்டி, விற்பனைக்கு அனுப்புகின்றனர். கோடை சீசன் துவங்கியுள்ளதால், தடுக்கு உற்பத்தியை தீவிரப்படுத்த, கூடுதலாக தென்னை மட்டைகளை வாங்கி இருப்பு வைத்து, பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை