உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முன்னாள் ராணுவ வீரர் சங்க ஆலோசனை கூட்டம்

முன்னாள் ராணுவ வீரர் சங்க ஆலோசனை கூட்டம்

உடுமலை;உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது.உடுமலையில் முன்னாள் ராணுவ வீரர் நலச்சங்க ஆலோசனை கூட்டம், லெப்டினென்ட் சுபாஷ் ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. சங்கத்தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். சங்க நிர்வாகத்தினர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், சங்க உறுப்பினர்களின் குறைகள் குறித்து கலந்துரையாடல் நடந்தது. உறுப்பினர்களின் பணிக்கால ஆவணங்களை சரிசெய்து கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது.முன்னாள் ராணுவீரர்கள் மருத்துவ உதவி பெறுவது குறித்தும் ஆலோசனை அளிக்கப்பட்டது. முப்படையில் மாணவர்களை சேர்ப்பது, அவர்களுக்கான பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.மரணமடையும் முன்னாள் ராணுவ வீரர்களின் உடலுக்கு இறுதி அஞ்சலி மற்றும் ராணுவ மரியாதை செலுத்தும் நிகழ்வில், அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில், அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்றனர். முன்னாள் ராணுவ வீரர் மோகன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ