உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகளுக்கு நடந்த மருத்துவ பரிசோதனை முகாமில், 47 பேருக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.கண், காது - மூக்கு - தொண்டை, மனநலம், நரம்பியல், எலும்புமுறிவு மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்புகளை பரிந்துரைத்தனர்.மாற்றுத்திறனாளிகள் 47 பேருக்கு புதிய அடையாள அட்டையும்; 13 மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை புதுப்பித்து கொடுக்கப்பட்டது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராமகுமார், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.இது போல், அவ்வப்போது நடைபெறும் மருத்துவ முகாமினை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை