உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திர கண்காட்சி சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கின்றன

பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திர கண்காட்சி சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்கின்றன

திருப்பூர்:சென்னையில் வரும் ஜூன் 14 முதல் 17-ம் தேதி வரை சர்வதேச பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திரக்கண்காட்சி நடக்கிறது.தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், சர்வதேச அளவிலான 'ஐ.பி.எல்.ஏ.எஸ்., - 2024' பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திர கண்காட்சி, ஜூன் 14, 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை டிரேடு சென்டரில் நடக்கிறது. கண்காட்சி குறித்த விளக்க கூட்டம், திருப்பூரில் நடந்தது.திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் சிவக்குமார், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சேகர் பேசினார்.கண்காட்சியில், சீனா, ஜப்பான், பிரிட்டன் உள்பட உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், அரங்கம் அமைக்கின்றன. ----பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திர கண்காட்சி குறித்த விளக்க கூட்டத்தில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க மாநில தலைவர் சேகர் பேசினார். அருகில், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னலாடை துறையினர் பயன்பெற அழைப்பு

கண்காட்சியில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய அனைத்துவகை பாலிபேக் தயாரிப்பு இயந்திரங்கள், பாலிபேக்களில் பிரின்ட் செய்யும் மெஷின்கள், முழு இயக்க நிலையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. பின்னலாடை உற்பத்தி துறைக்கு தேவையான ேஹங்கர்கள், பாலிபேக், டேக், பவுச், மோல்டிங், மக்கும் தன்மையுள்ள பாலிபேக் உள்பட அனைத்துவகை பேக்கிங் பொருட்கள்; பிளாஸ்டிக் உற்பத்தி மூலப்பொருட்கள் இடம்பெறுகின்றன.திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், ஆயத்த ஆடை உற்பத்தி துறையினர் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ