உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

உடுமலை;உடுமலை ராஜேந்திரா ரோட்டில் காணப்படும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை நகரில், பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு போன்ற பிரதான ரோடுகள் உள்ளன. இதில், ராஜேந்திரா ரோட்டில், நகராட்சி சந்தை, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளன.இந்த ரோட்டில் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். மேலும், தள்ளுவண்டிகள், கடைகளின் ஆக்கிரமிப்புகள் நிறைந்திருப்பதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சிறு விபத்துகளும் ஏற்படுகின்றன.எனவே, இந்த ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள், போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் இணைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை