உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க பேரவை கூட்டம்

உடுமலை;உடுமலையில் நடந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. இதில்ஓய்வூதியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் உடுமலை வட்ட பேரவை கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்கத்தின் தலைவர் சேசாச்சலம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் ஆண்டறிக்கை வாசித்தார்.பொருளாளர் ராமமூர்த்தி ஆண்டு வரவு-செலவு கணக்கை சமர்ப்பித்தார். ஓய்வூதியர்களின் பல்வேறு பிரச்னைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணை தலைவர்கள் ரகோத்தமன், காளியப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை