உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்றும், நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்  

இன்றும், நாளையும் சிறப்பு பஸ் இயக்கம்  

திருப்பூர்:வார விடுமுறை நாட்களில் வெளியூர் பயணிப்போர் வசதிக்காக, இன்றும், நாளையும், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமென போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக, ஒவ்வொரு வாரமும் போக்குவரத்து கழகம், திருப்பூர் மண்டலம் சார்பில் சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.நடப்பு வாரம் திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 10, கோவில்வழி பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, 15, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 15 என மொத்தம், 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இன்று மதியம் துவங்கி, நாளை இரவு வரை சிறப்பு பஸ்கள் இயங்கும்.தி.மலைக்கு சிறப்பு பஸ்'நாளை (21ம் தேதி) ஆடி மாத பவுர்ணமி. திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் வசதிக்காக, திருப்பூரில் இருந்து பவானி, சேலம், ஊத்தங்கரை வழியாக திருவண்ணாமலைக்கு, பத்து சிறப்பு பஸ் இன்று காலை முதல் நாளை மதியம் வரை இயக்கப்படும். இந்த பஸ்களில் வழக்கமான பயண கட்டணமே வசூலிக்கப்படும்,' என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ