உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நான்கு தளங்களுடன் சுகன் சுகா மருத்துவமனை

நான்கு தளங்களுடன் சுகன் சுகா மருத்துவமனை

திருப்பூர், திருமுருகன் பூண்டியில் நான்கு தளங்களுடன் விரிவுபடுத்தப்பட்டு, 90 படுக்கைகளுடன் இயங்கி வருகிறது.அதன் நிறுவனர்கள் டாக்டர் சுந்தரன், டாக்டர் கார்த்திகை சுந்தரன் ஆகியோர் கூறியதாவது:அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் அனுபவமும், திறமையும் கொண்ட மருத்துவர் குழு மூலம் 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜெனரல் வார்டு மற்றும் ஸ்பெஷல் வார்டு வசதி உள்ளது.பொதுமருத்துவம், நீரழிவு, குழந்தைகள் நலம், புற்று நோய், சிறுநீரகம், பல், மனநலம், பிரசவம், மகளிர் நலம், முடக்கு வாதம், மூளை நரம்பியல், தோல், நுரையீரல் உள்ளிட்ட அனைத்து பிரிவிலும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்.அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள், விபத்து சிகிச்சை பிரிவுகள் அதி நவீன மற்றும் தரமான மருத்துவ உபகரணங்களுடன் இயங்குகிறது.

பல்வேறு வசதிகள்

மேலும் அறுவை சிகிச்சை அரங்குகள், அனைத்து விதமான பரிசோதனை மற்றும் ஆய்வுக் கூடங்கள் உள்ளன. லேப்ராஸ்கோபி, வீடியோஎண்டோஸ்கோபி, கோலனோஸ் கோபி வசதிகள் உள்ளன.இருதய மற்றும் எலும்பு அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும். ஆட்டோமாடிக் லேப் மூலம் பரிசோதனைகள் துல்லியமாக மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தில் முதலிடம்

எங்கள் மருத்துவமனை மூலம் வஞ்சிபாளையம், நியு திருப்பூர், தெக்கலுார் ஆகிய மையங்களில் சிகிச்சையளிக்கப்படுகிறது. முதல்வர் காப்பீடு திட்டத்தில் 100 சதம் இலவசமாக விபத்து மற்றும் அவசர சிகிச்சைபெறலாம்.விரைவில் ைஹடெக் டயாலிசிஸ் பிரிவு துவங்கவுள்ளது. முதல்வரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளோம்.மேலும் விவரங்களுக்கு 96885 63666 மற்றும் 99659 64666 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்