உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விமானப்படையில் சேர ஆசையா வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்

விமானப்படையில் சேர ஆசையா வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்

உடுமலை:விமானப்படையில் நடத்தப்படும் அக்னிவீர் வாயு தேர்வில் பங்கேற்க, இணையதளத்தில் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.இந்திய விமானப்படையால் நடத்தப்படும் அக்னிவீர் வாயு தேர்வு, வரும் அக்டோபர் 18ம் தேதி இணையதளம் வழியாக நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்க, https://agnipathvayu.cdac.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 28ம் தேதி, விண்ணப்பிக்க கடைசிநாள்.கடந்த 2004, ஜூலை 3ம் தேதி முதல் 2008, ஜனவரி 3ம் தேதிக்குள் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணம், 550 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., செலுத்தவேண்டும்.பிளஸ் 2 அல்லது மூன்று ஆண்டுகள் பட்டய படிப்பு, தொழில் படிப்பு முடித்திருக்க வேண்டும். விமானப்படையில் பணிபுரிய விருப்பமுள்ளோர் தேர்வில் பங்கேற்கலாம். கூடுதல் விபரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை