உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

திருப்பூர்;திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 20வது ஆண்டு விழா நடந்தது.விழாவில், தன்னம்பிக்கை பேச்சாளர்கள் ராஜ்மோகன், டாக்டர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, பேசினர். வாழ்வில் முன்னேற தன்னம்பிக்கை அவசியம் என்ற கருத்தை முன்வைத்து பேசினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆண்டு விழாவில், பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பொருளாளர் லதா, பள்ளி முதல்வர் டயானா, ஒருங்கிணைப்பாளர் வித்யா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !