உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சி.பி.எஸ்.இ., தேர்வு துவங்கியது

சி.பி.எஸ்.இ., தேர்வு துவங்கியது

உடுமலை;திருப்பூர் மாவட்டத்தில், சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வு துவங்கியது. வரும், ஏப்., 2ம் தேதி வரை தேர்வு நடக்கிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.,) கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான பொதுத்தேர்வு நேற்றுமுன்தினம் துவங்கியது. திருப்பூர் மாவட்டத்தில், 15 முதல், 25 மையங்களில் காலை, 10:00 மணிக்கு தேர்வு துவங்கியது.ஏப்., 2ம் தேதி வரை தேர்வுகள் நடக்கிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும், 4,300 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். மாநில பாடத்திட்டத்தின் கீழ் பத்து மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவியர் ஆயத்தமாகி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ