உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கோவில் உண்டியலில் பக்தர் காணிக்கை ரூ.29 லட்சம்

அவிநாசி கோவில் உண்டியலில் பக்தர் காணிக்கை ரூ.29 லட்சம்

அவிநாசி; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடப்பாண்டில் இரண்டாவது முறையாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கடந்த ஏப்., 29ம் தேதி உண்டியல் எண்ணப்பட்டு, 27 லட்சம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டிருந்தது.அதன்பின், நடப்பாண்டில் இரண்டாவது முறையாக நேற்று உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.அறநிலையத்துறை உதவி ஆணையர் தனசேகர், கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார் குழுவினர் முன்னிலையில், கோவில் வளாகத்தில் உள்ள சபா மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.இதில், திருப்பூர் ஸ்ரீ வாரி டிரஸ்டை சேர்ந்த பெண்கள் உள்பட 70 பேர் கலந்து கொண்டு காணிக்கைகளை எண்ணினர்.மொத்தம், 29 லட்சத்து 53 ஆயிரத்து 378 ரூபாய் ரொக்கம், 128 கிராம் தங்கம், 2.78 கிலோ வெள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை