| ADDED : டிச 03, 2025 06:18 AM
திருப்பூர்: திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த பிரதோஷ பூஜையில், நந்தியம் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் மற்றும் உமாமகேஸ்வரருக்கு மகா அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனையை தொடர்ந்து, சுவாமி புறப்பாடு நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமா மகேஸ்வரர், பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். l அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், வெள்ளகோவில் மயில்ரங்கம் வைத்தீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், அலகுமலை ஆதி கைலாசநாதர் கோவில், சாமளாபுரம் சோளீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் நேற்று பிரதோஷம் முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தது. மேலும், டி.பி.என். காலனி - காசி விஸ்வநாதர் கோவில், லட்சுமி நகர் - அண்ணாமலையார் கோவில், விராலிக்காடு சென்னியாண்டர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி, பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் - காசி விஸ்வநாதர் சன்னதி உள்ளிட்ட அனைத்து பகுதி சிவன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடந்தன. இவற்றில் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.