உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கல்லுாரி மாணவர் அபாரம்

அரசு கல்லுாரி மாணவர் அபாரம்

திருப்பூர்:பளு துாக்கும் போட்டியில், அரசு கல்லுாரி மாணவர் மாநில அளவில், இரண்டாமிடம் பெற்றார்.ஈரோட்டில் தமிழ் பிட்னஸ் அசோசியேஷன் மற்றும் ஈரோடு பிரண்ட்ஸ் பிட்னஸ் சார்பில், மாநிலம் தழுவிய மிஸ்டர் ஸ்ட்ராங்மேன் அண்ட் பெண் -2024 போட்டிகளை நடத்தியது. இதில், காங்கயம் அரசு கல்லுாரியை சேர்ந்த மாணவர் ஜெயராமன் பங்கேற்றார். 52 கிலோ எடை பிரிவில், 160 கிலோ எடையை துாக்கி மாநில அளவில், இரண்டாமிடம் பெற்றார். சாதித்த மாணவர் ஜெயராமனை, கல்லுாரி முதல்வர் நசீம்ஜான் மற்றும் பேராசிரியர் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்