மனைவியை தாக்கிய கணவன் கைது
தாராபுரம்; மூலனுார் அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் இளமதி, 30. இவரது கணவர் மணிவேல், 29. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணிவேல், தினமும் மது அருந்துவதால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது.கடந்த, 21ம் தேதி மது அருந்தி விட்டு சென்ற மணிவேல், மனைவியையும், தாயையும் தாக்கினார். இதுதொடர்பான புகாரின் பேரில், அவரை மூலனுார் போலீசார்கைது செய்தனர்.