உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செவிலியர் அறை திறப்பு

செவிலியர் அறை திறப்பு

பொங்கலுார்; பொங்கலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய செவிலியர் குடியிருப்பு, 33 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டது. அதை நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பொங்கலுார் ஒன்றிய குழு தலைவர் குமார், ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரவேல், பொறுப்பு மருத்துவ அலுவலர் சாம்பால், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை