| ADDED : ஜன 19, 2024 04:32 AM
திருப்பூர் : பாலக்காட்டில் இருந்து திருச்சி செல்லும் ரயில் இன்று கரூர் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கரூர் - திருச்சி வழித்தடத்தில், லாலாப்பேட்டை - குளித்தலை, பெட்டைவாய்த்தலை - பெருகுமணி இடையே பொறியியல் மேம்பாட்டு பணி இன்று நடக்கிறது. இதனால், பாலக்காட்டில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் ரயில் இன்று கரூர் வரை மட்டும் இயங்கும். சீதலவாய், குளித்தலை, பெட்டை வாய்த்தலை, திருச்சி கோட்டை, திருச்சி ஜங்ஷன் செல்லாது.அதே நேரம், மறுமார்க்கமாக திருச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு இயங்கும் ரயில் (எண்:16843) மதியம், 1:00 மணிக்கு பதிலாக இரண்டு மணி நேரம் தாமதமாக, மதியம், 3:00 மணிக்கு புறப்படும். இதனால், திருப்பூருக்கு மாலை, 4:50 மணிக்கு பதிலாக, 6:50 மணிக்கு வரும். பாலக்காடு டவுன் ஸ்டேஷனை இரவு, 8:25 மணிக்கு பதிலாக, 10:25 மணிக்கு சென்று சேரும்.