உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

- நிருபர் குழு -சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று மாலை, 4:30 மணிக்கு கணபதி ேஹாமம், மாலை, 5:30 மணிக்கு சிறப்பு அபிேஷகம், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் முழு முதற்கடவுள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதேபோன்று, பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.* உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், குட்டை திடல் சித்தி புத்தி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், நேற்று சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.சின்னபொம்மன்சாளையில் உள்ள செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. விநாயகருக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை