உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

அவிநாசி;அவிநாசி அருகே ராயம்பாளையத்தில், ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு நடைபெற்றது.கோவிலில், 14ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நட்டு பொங்கல் விழா துவங்கியது. அதனை தொடர்ந்து, அபிஷேக பூஜை, அம்மன் அழைத்தல், விளக்கு மாவு எடுத்து வருதல், பூவோடு எடுத்தல் ஆகியவை நடைபெற்றது. பொங்கல் விழாவிற்காக, 16ம் தேதி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பெண்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு சென்றனர்.நேற்று, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெற்றது. ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் விழா குழுவினர் சார்பில் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு நாளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ