உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் விழா

ஸ்ரீமாகாளியம்மன் பொங்கல் விழா

திருப்பூர்; அவிநாசி, முருகம்பாளையம் மாகாளியம்மன் பொங்கல் விழா நேற்று கோாலகலமாக நடந்தது; பெண்கள், வாணவேடிக்கை, மேளதாளத்துடன், மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.அவிநாசி, வஞ்சிபாளையம் அடுத்துள்ள முருகம்பாளையம் மாகாளியம்மன் பூச்சாட்டு பொங்கல் விழா, நேற்று முன்தினம் பொட்டுசாமி பூஜையுடன் துவங்கியது.நேற்று, மாலை, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், இரவு, 9:00 மணிக்கு, வாணவேடிக்கையுடன் மாவிளக்கு, அம்மன் ஊர்வலம் மற்றும் கலை நிகழ்ச்சியும் நடந்தது. பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று அம்மனை வழிபட்டனர். இன்று காலை முதல், பக்தர்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை