உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குட்டையில் முழ்கி மாணவன் பலி

குட்டையில் முழ்கி மாணவன் பலி

அனுப்பர்பாளையம்; திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி, காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாலன்; பனியன் தொழிலாளி. இவரது மகன் மவுதீஷ்வரன், 17, இவர் கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1ம் வகுப்பு படித்து வந்தார்.மவுதீஸ்வரன் நேற்று சக நண்பர்களுடன் பெருமாநல்லுார் அருகேயுள்ள பொடாரம்பாளையம் குட்டையில் குளிக்க சென்றார். குளித்து கொண்டிருந்தபோது, ஆழமான பகுதியில் மூழ்கி இறந்தான்.அவிநாசி தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை