உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பள்ளியில் தமிழ் கூடல் விழா: மாணவர்களுக்கு பரிசு

 பள்ளியில் தமிழ் கூடல் விழா: மாணவர்களுக்கு பரிசு

உடுமலை: உடுமலை பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், தமிழ் கூடல் விழா நடந்தது. பள்ளி உதவி தலைமையாசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி தலைமை வகித்தார். கணித ஆசிரியர் ரமேஷ் முன்னிலை வகித்தார். முதுகலை தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் மருதமுத்து, 'தமிழும், தன்னம்பிக்கையும்' என்ற தலைப்பில், சுய முயற்சியால், முன்னேறியவர்கள் குறித்து பேசினார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு இயற்பியல் ஆசிரியர் கணேசபாண்டியன் பரிசு வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜான்பாஷா நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை