உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நன்மை, தீமையை அறிவிக்கும் சிவன்மலை கோவில் ஆண்டவர்

நன்மை, தீமையை அறிவிக்கும் சிவன்மலை கோவில் ஆண்டவர்

திருப்பூர்:''வருகின்ற நன்மையையும், தீமையையும் முன்கூட்டியே அறி-வித்து, சிவன்மலை ஆண்டவர் நமக்கு திருவருள் செய்கிறார்,'' என, கூனம்பட்டி குருகுல வேதபாடசாலை முதல்வர் நடராஜ சுவாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது:வரப்போகும் நன்மையையும், தீமையையும் முன்கூட்டியே அறி-வித்து, நமக்கு திருவருள் செய்கி றார் சிவன்மலை ஆண்டனர் சிவாச்சலபதி. ஒவ்வொரு காலகட்டத்திலும், உத்தரவு கொடுத்து, நமக்கு அதை புரிய வைக்கிறார். என்ன உத்தரவாகிறதோ அதன்-படி அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. சிவன்மலை ஆண்-டவர் உத்தரவு என்றாலே எல்லோருக்கும் ஒருவிதம் பயம் உண்டு; புதிய உத்தரவால் என்ன நடக்குமோ என்ற சிந்தனையும் உண்டு. அந்த வகையில் பார்க்கும் போது, தற்போது கடல்நீர் வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளதை அறிந்தோம்; இதுவும் நன்மைக்கே என்று கூறலாம்.எல்லா குடும்பங்களிலும், பிதுர்தோஷம் என்று கூறக்கூடிய, தோஷம் மற்றும் மனஸ்தாபங்கள் இருக்கிறது. சரியான முறையில் திதி கொடுக்காமல் இருந்தால், அதற்கான காரணத்தை உணர்த்-தவே கடல்நீரை காட்டியிருக்கிறார். எல்லா நதிகளும், சமுத்தி-ரத்தில் சங்கமிக்கின்றன. உலகில் பல்வேறு மதங்கள் இருந்-தாலும், இறைவனையே நிறைவாக சென்றடைகின்றன. அந்தவ-கையில், பல்வேறு நதிகள் கடலை சென்றடைவதால், கடலில் அவ்வளவு புனிதம் இருக்கிறது.கடல்நீரில் தர்ப்பணம், திதி கொடுத்து வழிபாடு செய்வது, நமது ஹிந்து மதத்துக்கும், மக்களுக்கும் உறுதுணையாக இருக்கிறது. சிவன்மலை ஆண்டவர், அதை மக்களுக்கு உணர்த்தும் வகை-யில்தான், கடல்நீர் வைக்க உத்தரவிட்டுள்ளார் என்றே அறிய முடி-கிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை