உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் மாணவனுக்கு இலவச கல்வி

ஜெய் ஸ்ரீராம் கல்லூரியில் மாணவனுக்கு இலவச கல்வி

திருப்பூர் : ஏழை மாணவன் இலவசமாக உயர்கல்வி பயில்வதற்கு ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான உத்தரவை, அம்மாணவனிடம் கலெக்டர் மதிவாணன் வழங்கினார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவன் பொன்ராஜ், கட்- ஆப் 200க்கு 196 மதிப்பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக பொன்ராஜை உயர்கல்விக்கு அனுப்ப பெற்றோரால் முடியவில்லை. அம்மாணவன் உயர்கல்வி கற்க, செந்தில் வேலவன் அறக்கட்டளை மூலம் இயங்கும் ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனத்துக்கு கலெக்டர் மதிவாணன் பரிந்துரைத்தார்.தங்களது கல்லூரியில் பி.இ.,- இ.இ.இ., கல்வி இலவசமாக அளிக்க, அக்கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இலவச கல்வி பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் மதிவாணன் நேற்று வழங்கினார். ஜெய்ஸ்ரீராம் கல்லூரி தலைவர் தங்கராஜ், பொருளாளர் கோவிந்தசாமி, கல்லூரி முதல்வர் ரமேஷ்குமார் மற்றும் மாணவனின் பெற்றோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை