மேலும் செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி சனி மகா பிரதோஷம்
16 hour(s) ago
பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
16 hour(s) ago
குண்டாஸில் 6 பேர் கைது
02-Oct-2025
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், பவுர்ணமியையொட்டி நேற்று, 2வது நாளாக ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையிலுள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக பாவித்து வழிபடுகின்றனர். பவுர்ணமி தோறும், 14 கி.மீ., அண்ணாமலையார் மலையை வலம் வந்து, கோவிலிற்கு சென்று, அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையம்மனை வழிபட்டு வருகின்றனர். இதில், வைகாசி மாத பவுர்ணமி திதி, நேற்று முன்தினம் இரவு, 7:14 முதல், நேற்றிரவு, 7:48 மணி வரை இருந்தது.அந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். இதில், நேற்று முன்தினம் இரவு, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்ற நிலையில், நேற்றிரவு வரை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், கோவிலில், 7 மணி நேரம் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
02-Oct-2025
29-Sep-2025