மேலும் செய்திகள்
வாலிபருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது; இருவர் தலைமறைவு
15 hour(s) ago
மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
15 hour(s) ago
வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்வெள்ளியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 72 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு, இரண்டு கட்டடங்கள் இருந்த நிலையில், 2019ல் பழமையான ஒரு கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து ஒரு கட்டடத்தில் மூன்று வகுப்புகளும், மற்ற வகுப்புகள் அருகே உள்ள மரத்தடியிலும் நடத்தப்படுகிறது. மாணவ, மாணவியரின் பெற்றோர், பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டி தரக்கோரி, கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் நேற்று, மாணவர்களை வகுப்பறைக்கு செல்ல விடாமல் பெற்றோர் தடுத்து, பள்ளி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், பேச்சு நடத்தினர். அப்போது, வங்கி நிதியுதவியுடன் புதிய பள்ளி கட்டடம் கட்ட, அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது எனக்கூறி, சமாதானம் செய்தனர். இதையடுத்து மாணவர்கள், போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago