மேலும் செய்திகள்
சில்மிஷ ஊழியர் போக்சோவில் கைது
29-Sep-2025
அருணாசலேஸ்வரர் கோவில் ஊழியரை கொல்ல முயற்சி
29-Sep-2025
போலீசாரை கொல்ல முயன்ற கஞ்சா கடத்தல் காரால் பகீர்
28-Sep-2025
தி.மலையில் கூட்ட நெரிசல் பக்தர் பலி
25-Sep-2025 | 1
போளூர் : போளூர் அருகே, அனுமதியின்றி காளை விடும் விழா நடத்திய, 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அத்திமூர் கிராமத்தில், 2 இடங்களில், நேற்று முன்தினம் முதல், ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து காளை விடும் விழா நடத்த விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக அனுமதி கேட்டு, போளூர் போலீசில் மனு அளித்தனர். ஆனால், போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும் அனுமதியை மீறி, நேற்று முன்தினம் மாலை, காளை விடும் விழாவை கிராம மக்கள் நடத்தினர். இதையடுத்து, அனுமதியின்றி காளை விடும் விழா நடத்த ஏற்பாடு செய்த, 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
29-Sep-2025
29-Sep-2025
28-Sep-2025
25-Sep-2025 | 1