உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கைவிலங்குடன் தப்பிய கைதி மலையில் சிக்கினார்

கைவிலங்குடன் தப்பிய கைதி மலையில் சிக்கினார்

வேலுார்: வேலுார் அருகே, போலீசாரிடமிருந்து கைவிலங்குடன் தப்பிய கைதி, போலீசில் சிக்கினார். வேலுார் மாவட்டம் காட்பாடி, தாராப்படவேடு பகுதியை சேர்ந்தவர் காமேஷ், 23; கஞ்சா வழக்கில், காட்பாடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். அப்போது கைவிலங்கு போட்டிருந்த காமேஷ், போலீசார் பிடியிலிருந்து தப்பியோடினார். போலீசார் இரு தனிப்படை அமைத்து தேடி வந்தனர். வேலுாரை அடுத்த கசம் மலையில் பதுங்கியிருந்த காமேஷை, போலீசார் நேற்று பிடித்தனர். அவருக்கு துணையாக இருந்த மூன்று பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை