மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
12 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
12 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
12 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
12 hour(s) ago
திண்டிவனம்,: குறைந்த விலையில் தங்கம் வாங்கி தருவதாக கூறி சென்னை நபரிடம் வழிப்பறி செய்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்தவர் ஹிதேஷ்பிஷா,44; தனியார் கல்லுாரியில் நிர்வாக உதவியாளர். இவருக்கு, பேஸ்புக் மூலம் பழக்கமான ராஜராஜன் என்பவர், தனக்கு கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பழக்கம் உள்ளதாகவும், 10 முதல் 15 சதவீதம் விலை குறைவாக தங்கம் வாங்கி தருவதாக கூறினார்.அதனை நம்பி, குறைந்த விலையில் தங்கம் வாங்க கடந்த 3ம் தேதி காரில் திண்டிவனம் கூட்டேரிப்பட்டு சாலைக்கு வந்த ஹிதேஷ்பிஷா மற்றும் அவரது டிரைவரையும், ராஜராஜன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று, அவர் வைத்திருந்த ரூ.35 லட்சம் ரொக்கம், 2 சவரன் செயின், 2 மொபைல் போன்களை பறித்துச் சென்றனர்.இது குறித்து, ஹிதேஷ்பிஷா அளித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து ராஜராஜன் உட்பட 8 பேரை தேடி வந்தனர்.இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னை, நோணாங்குப்பம் முருகன் மகன் லோகநாதன், 35; காட்டேரிக்குப்பம் பாலமுருகன் மகன் சந்துரு, 22; ரமேஷ் மகன் தினேஷ்,19; ஆகியோரை நேற்று காலை 9:00 மணிக்கு கண்டமங்கலம் அடுத்த பள்ளி தென்னலில், இன்ஸ்பெக்டர் தரனேஸ்வரி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago