உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்கிளை விழுந்து மூதாட்டி சாவு

மரக்கிளை விழுந்து மூதாட்டி சாவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மரக்கிளை விழுந்து காயமடைந்த மூதாட்டி இறந்தார்.விழுப்புரம் அருகே பில்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்தாயி, 80; இவர், கடந்த 10ம் தேதி வீட்டின் பின்னால் நின்றிருந்தபோது, பலத்த காற்றால் வேப்பமரம் கிளை முறிந்து அவரது தலை மீது விழுந்து காயமடைந்தார். உடன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ