உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்பட்டில் அன்னியூர் சிவா தேர்தல் பிரசாரம்: அமைச்சர்கள் பொன்முடி, மகேஷ் பங்கேற்பு

கல்பட்டில் அன்னியூர் சிவா தேர்தல் பிரசாரம்: அமைச்சர்கள் பொன்முடி, மகேஷ் பங்கேற்பு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார்.காணை ஒன்றியம், கல்பட்டு கிராமத்தில் நடந்த பிரசார கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் ராஜா தலைமை தாங்கினார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகன், விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி முன்னிலை வகித்தனர்.உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறப்புரையாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமமூர்த்தி, மாவட்ட துணை சேர்மன் தங்கம், மாவட்ட செயலாளர் மதிவாணன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணைச் செயலாளர் தயா இளந்திரையன், ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் முருகன், சிவக்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை