உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

அவலுார்பேட்டை,: மேல்மலையனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார்.மேல்மலையனுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமத், துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், யசோதரை முன்னிலை வகித்தனர். தாசில்தார் தனலட்சுமி வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்,இதில் மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி, ஊராட்சித் தலைவர் வெங்கடேசன், துறை சார்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ