உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

விவசாயியிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 45; விவசாயி. கோழிப்பண்ணை உரிமையாளர். இவரை வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்து பணம் சம்பாதிப்பது குறித்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ஜெயச்சந்திரன், மூன்று தவணைகளாக ரூ. 6 லட்சத்து 5 ஆயிரம் அனுப்பி வைத்தார். அதன்பிறகு, டிரேடிங் பணத்தை எடுக்க முடியவில்லை.தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ