உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

திரவுபதி அம்மன் கோவில் தேர் திருவிழா

விழுப்புரம்: வளவனுார் திரவுபதி அம்மன் கோவில் ஆடி மாத தேரோட்டம்நடந்தது.விழுப்புரம் அடுத்த வளவனுார் குமாரபுரி திரவுபதி அம்மன், கிருஷ்ணசாமி கோவில் பிரம்மோற்சவ விழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன்துவங்கியது.தினமும் சவாமிக்கு சிறப்ப அபிேஷக, ஆராதனை நடந்து வருகிறது. 15ம் தேதி கருட வாகனமும், 17ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.முக்கிய விழாவாக நேற்று, தேரோட்டம் நடந்தது. காலை 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமி தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் துவங்கியது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு 7:00 மணிக்கு அறிவுடை நம்பியின் பாரத உபன்யாசம்நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ