மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
16 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
16 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
16 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
16 hour(s) ago
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே சாலை விபத்தில் தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவி 514 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராயலு. மிளகாய் வியாபாரி. இவரது மகள் அனிதா, 17; இவர், சரவணம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தார்.இவர், தேர்வு எழுதி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி ஆங்கில தேர்வு அன்று அனிதாவின் தந்தை சுப்புராயலு கார் மோதி இறந்தார். தந்தை இறந்த நிலையிலும், அனிதா தேர்வு எழுதினார்.இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மாணவி அனிதா 514 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் பாடம் வாரியாக பெற்ற மதிப்பெண் விபரம்:தமிழ் 99, ஆங்கிலம் 63, வரலாறு 77, பொருளாதாரம் 91, வணிகவியல் 93, கணக்குப் பதிவியல் 91 என 600க்கு 514 மதிப்பெண் பெற்றுள்ளார்.இதுகுறித்த அந்த மாணவி கூறுகையில், 'குடும்ப சூழல் காரணமாக என்னால் மேல்படிப்பு தொடர முடியுமா என தெரியவில்லை. மேல் படிப்பை தொடர அரசு உதவ வேண்டும்' என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago