உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

ஓட்டு எண்ணும் மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

விழுப்புரம் விழுப்புரம் தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான, விழுப்புரம் அரசு அண்ணா கலைக்கல்லுாரி மையத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானுார், திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 6 தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், தனித்தனியாக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.அங்கு சுழற்சி முறையில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு கேமரா மூலம், கண்காணிப்பு அறையிலிருந்து, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது.ஓட்டு எண்ணும் மையத்தின் கண்காணிப்பு பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.வாயில் பகுதி வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு சென்ற அவர், ஸ்ட்ராங் ரூம் முன் போலீஸ் பாதுகாப்பை பார்வையிட்டார். அங்கு சுழற்சி முறையில், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததை பார்வையிட்டு, அவர்களிடம் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, கண்காணிப்பு அறையில், கேமரா காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், அங்கிருந்த வேட்பாளரின் முகவர்கள், அலுவலர்களிடம், பாதுகாப்பு நிலவரங்களை கேட்டறிந்தார். அலுவலர்கள், முகவர்கள் கையெழுத்திடுகின்றனரா, அங்கு தினசரி வருபவர்கள் குறித்தும் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை