| ADDED : மே 15, 2024 11:38 PM
விழுப்புரம்: விழுப்புரம் (தனி) தொகுதி ஓட்டு எண்ணும் மையத்தில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் மையமான, விழுப்புரம் அரசு அண்ணா கலைக்கல்லுாரி மையத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை, வானுார், திண்டிவனம் ஆகிய 6 தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.அங்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும், சி.சி.டி.வி., மூலம், கண்காணிப்பு அறையிலிருந்தும், தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு வருகிறது.ஓட்டு எண்ணும் மையத்தின் கண்காணிப்பு பணியை, மாவட்ட தேர்தல் அலுவலரான, கலெக்டர் பழனி நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, பிறகு உள்ளே சென்று ஆய்வு செய்தார். இதனையடுத்து, ஸ்ட்ராங் ரூம் போலீஸ் பாதுகாப்பையும் பார்வையிட்டார். அங்கு சுழற்சி முறையில் துணை ராணுவ படையினர் கண்காணிப்பு குறித்தும் மற்றும் கண்காணிப்பு அறையிலிருந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்வையிட்டு, பாதுகாப்பு நிலவரங்களை கேட்டறிந்தார்.