உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பிளஸ் 2 மாணவி மாயம் போலீஸ் விசாரணை

பிளஸ் 2 மாணவி மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரத்தில் பிளஸ் 2 மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் அடுத்த அகரம் சித்தாமூரைச் சேர்ந்தவர் ஹரிகரன் மகள் ஹரிணி,16; இவர், விழுப்புரம் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், கடந்த 12 நாட்களாக, விழுப்பரம் சிதம்பரனார் நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி மாலை கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி