உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பொன்முடி மீதான குவாரி வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

பொன்முடி மீதான குவாரி வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், பூத்துறை குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்த அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உட்பட 8 பேர் மீது, கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில் நேற்று முன்தினம் வரை 26 பேர் விசாரிக்கப்பட்டனர். அவர்களில் 22 பேர் பிறழ் சாட்சியாகினர். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி (பொறுப்பு) ஹெர்மிஸ், வழக்கின் விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

shyamnats
ஏப் 25, 2024 08:52

il இருந்து விசாரணை, வழங்கப்பட்ட தீர்ப்பும் நிறுத்தி வைய்ப்பு, இன்னும் என்ன க்குள்ளாவது குற்றவாளி என்று நிரூபிக்க படுவாரா, தண்டிக்க படுவாரா ? அல்லது , அடுத்த நூற்றாண்டு வரை விசாரணைகள் தொடருமா ?


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி