உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு

ஊரக வளர்ச்சி உதவியாளர்கள் துணை பி.டி.ஓ.,வாக பதவி உயர்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உதவியாளர்களாக பணிபுரிந்த 15 பேர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில், கோலியனுார் ஒன்றிய உதவியாளர் அரவிந்ததேவி, கண்டமங்கலம் மண்டலம் 3 துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மேல்மலையனுார் ஒன்றியம் மதுசூதனன், அங்குள்ள மண்டலம் 4 துணை பி.டி.ஓ.,வாகவும், கண்டமங்கலம் ஊர்நல அலுவலர் நிலை 1 முருகன், மயிலம் மண்டலம் 2 துணை பி.டி.ஓ., வாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.வல்லம் ஒன்றியம் ராஜசேகரன், அங்குள்ள மண்டலம் 2 துணை பி.டி.ஓ.,வாகவும், மேல்மலையனுார் ஒன்றியம் ஊர்நல அலுவலர் நிலை 1 கங்காதரன், வல்லம் மண்டலம் 1 துணை பி.டி.ஓ.,வாகவும், செஞ்சி ஒன்றியம் கந்தசாமி, அங்குள்ள மண்டலம் 1 துணை பி.டி.ஓ.,வாக உட்பட 15 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பழனி பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி