உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

விழுப்புரம்: உலக சமுதாய சேவா சங்க நிறுவனர் வேதாத்ரி மகரிஷி பிறந்த நாளையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.விழுப்புரம் மனவளக்கலை அறங்காவலர்கள் மற்றும் கப்பூர் அரசு உயர்நிலை பள்ளி சார்பில் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் ரவிச்சந்தர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். ஊராட்சி தலைவர் கவுரிராஜா முன்னிலை வகித்தார்.தோட்டக்கலை இணை இயக்குனர்கள் வைஷாலி, துர்காதேவி ஆகியோர் பழ மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கி, அதை வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினர்.விழாவில், நிர்வாகிகள் பாண்டுரங்கன், இளங்கோவடி, பத்மபிரியா, மாவட்ட ஒசோன் பாதுகாப்பு இயக்க தலைவர் ராமன், மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் தேவராஜ் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ