உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா கோனூர் கிராமத்தில், காணை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மதியழகன், 26; அங்குள்ள சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார். அவரை சோதனை செய்ததில், 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே பறிமுதல் செய்த காணை போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை