உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு துறையினர் மீட்பு

செஞ்சி: செஞ்சியில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சாரை பாம்பை தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு காப்புக் காட்டில் விட்டனர்.செஞ்சி, சிறுகடம்பூர், சபரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் பாஷா. இவரது வீட்டின் பின்புறம் நேற்று காலை 7 அடி நீளமுள்ள சாரை பாம்பு புகுந்தது. தகவலறிந்த செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று, பாம்பை பிடித்து செஞ்சி அடுத்த காப்புக் காட்டில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை