உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அருகே வேலியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தும்பநாயகம் மகன் முருகவேல்,31; கடன் பிரச்னை அதிகமாக இருந்ததால் இவர், கடந்த 12ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ